

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று வந்துள்ள மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜப்பானில் சூரை மீன்களின் தேவை அதிகமுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து சூரை மீன்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக அந்நாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.