திருமங்கலம் தொகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். திருமங்கலம் அருகே கப்பலூர், மேலக்கோட்டை, ஆலம்பட்டி, அலப்பலச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் துப்புரவு பணியாளர் ஒருவரின் காலில் விழுந்து வணங்கியது அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.