வீர‌ர்களுடன் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் அனுராக் தாகூர்

x

அருணாச்சலப் பிரதேச வீர‌ர்களை ஆசிய விளயாட்டுப்போட்டிக்கு அனுமதிக்காத‌தால், சீன பயணத்தை ரத்து செய்த‌தாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூரில், தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர், பேசிய அனுராக் தாகூர், பாகுபாடு காட்டி,அருணாச்சலப் பிரதேச வீர‌ர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சீனா அனுமதிக்காத‌து, ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். தொடர்ந்து, வீர‌ர்களுடன் 600 மீட்டர் ஓடி சென்ற அனுராக் தாகூர், கிரிக்கெட், கால்பந்து, கைபந்து விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்