"என் தங்கம் காயுதே.. அய்யோ.."-"வாய்க்கு எட்டாம போயிரும்போலயே"-வேதனையில் கதறும் விவசாயிகள்

x

தஞ்சையில், குறுவை நெல்மணிகள் பால் பருவத்தில் உள்ள நிலையில், காய்ந்து வரும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.


மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததை அடுத்து, கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காவிரி, வெண்ணாறுகளில் மட்டுமே முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கல்லணைக் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் கல்லணைக் கால்வாயை நம்பி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தஞ்சை அருகே குறுவை நடவு செய்த விவசாயிகள், நெல்மணிகள் பால் பருவத்தில் உள்ள நிலையில், கடைசி தண்ணீர் விட வேண்டியிருப்பதாகவும், இந்த நேரத்தில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்