water | waste |3 நாட்களாக வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர் - "அலட்சியம் காட்டும் அதிகாரிகள்"... குமுறும் மக்கள்
3 நாட்களாக வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர் - "அலட்சியம் காட்டும் அதிகாரிகள்"... குமுறும் மக்கள்
#madurai | #drinkingwater | #usilampatti 3 நாட்களாக வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர் -
"அலட்சியம் காட்டும் அதிகாரிகள்"... குமுறும் மக்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில், ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த 3 நாட்களாக குடிநீர் வெளியேறி வருவதால், அருகில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணறு நிரம்பி வழிவதுடன், சுற்றுவட்டார பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
