கடல் கடந்து காதல் - மெக்சிகோ பெண்ணை கரம் பிடித்த தமிழர்

x

காதல் திருமணம் செய்து கொண்ட மெக்சிகோ நாட்டு பெண்ணுக்கும், தமிழக இளைஞருக்கும், இந்துமுறைப்படி திருமண வரவேற்பு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் கஸ்பா பகுதியை சேர்ந்த இசக்கிமுத்துவும், மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞர் அசுவாணி லோபெஸும் (Azuani Lopez) கடந்த 6 ஆண்டுகலாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் மெக்சிகோவில் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்துமுறைப்படி சொந்த ஊரில் திருமண வரவேற்பு நடைபெற்றது. கோவிலில் சாமி தரிசனம் செய்த மணமக்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்