அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடைவிதித்திருந்த நிலையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆயிரக்கணக்கானோர் இந்த போட்டியில் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story