மீண்டும் வெடித்த கலவரம்.. மணிப்பூரில் உச்ச கட்ட பரபரப்பு

மணிப்பூர் சூரசந்த்பூரில் ஹமர் பழங்குடியினத் தலைவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹமர் மற் றும் ஜோமி பழங்குடியினர் இடையே மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் வெடித்தது... ஜோமி பழங்குடியினரின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், கடைகள் சூறையாடப்பட்டன. போலீசார் போராடி கலவரத்தைக் கட்டுப்படுத்திய நிலையில், சூரசந்த்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com