Manamadurai | "பணம் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.." தாலுகா ஆபீஸில் வினோத அறிவிப்பு

Manamadurai | "பணம் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.." தாலுகா ஆபீஸில் வினோத அறிவிப்பு

Manamadurai | "பணம் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.." தாலுகா ஆபீஸில் வினோத அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான அறிவிப்புப் பலகை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் தாசில்தார் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், "வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மனுக்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் மட்டுமே வர வேண்டும்; பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டா மாறுதல், வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதைத் தடுக்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை தவிர்க்கவும், அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com