மதுவிலிருந்து விடுபட போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாள் காலையிலே மரணம்

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட நபர் உயிரிழப்பு

சென்னை போரூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட மறுநாளே ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெள்ளியார் அகரத்தைச் சேர்ந்த சர்மா என்பவர் வருவாய்த்துறையில் பணியாற்றி வந்தார். மதுவுக்கு அடிமையான இவரை, அவரது தந்தை வானகரத்தில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். அங்கு சேர்க்கப்பட்ட மறுநாள் காலையிலே அவர் உயிரிழந்ததால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com