விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த நபர்

விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த நபர்
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு ஒருவர், இறுதி சடங்கு செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானதிரையன்பட்டினத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி, நாய்க்குட்டி ஒன்று உயிரிழந்தது. விபத்தில் கை, கால், தோள்பட்டை என உடல் முழுவதும் காயமடைந்த நிலையிலும், தனது காயங்களைப் பொருட்படுத்தாமல் நாய்க்குட்டியை கையிலேந்தி கண்ணீர் வடித்து, சாலையோரம் குழி தோண்டி புதைத்தார்.

ப்ரீத்...

X

Thanthi TV
www.thanthitv.com