வலைதளத்தில் பரவிய பொய்யான தகவலால் பிராய்லர் கோழி விற்பனை சரிந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார், ஊனம்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரை கைது செய்தனர். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிததுள்ளனர்.