கடிக்க வந்த தெரு நாயை அடித்துக் கொன்றவர் கைது

x

மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன். இவரது கடைக்கு வந்த முதியவரை தெரு நாய் ஒன்று கடிக்க முயன்ற நிலையில், அதனை மோகன் விரட்டியுள்ளார். அப்போது அவரையும் அந்த நாய் கடிக்க வந்துள்ளது. ஆத்திரம் அடைந்த மோகன், நாயை கட்டையால் அடித்துக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். புகாரின் பேரியில், மோகன் மீது விலங்குகளை கொல்லுதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்பு அவரிடம் விளக்கம் கேட்டு பெற்ற போலீசார், மோகனை விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்