மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் பழங்குடியின மக்கள் நடத்திய குலதெய்வ வழிபாடு விமரிசையாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பழங்குடியின மக்கள் கடற்கரையிலேயே குடில் அமைத்து தங்கி இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். மாசிமக பவுர்ணமி அன்று குலதெய்வமான கன்னியம்மன் கடற்கரையில் அருள்பாலிப்பதாக இருளர் பழங்குடியின மக்கள் நம்புகின்றனர். இதன்படி கன்னியம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.