Mamallapuram Kite Festival | "20 நாடுகளுக்கு மேற்பட்ட மக்கள்.." -மாமல்லபுரத்தில் கூடிய கூட்டம்..
Mamallapuram Kite Festival | "20 நாடுகளுக்கு மேற்பட்ட மக்கள்.." -மாமல்லபுரத்தில் கூடிய கூட்டம்..
Mamallapuram Kite Festival | மாமல்லபுரத்தில் கூடிய கூட்டம்.. "20 நாடுகளுக்கு மேற்பட்ட மக்கள்.." - அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி மாமல்லபுரத்தில், சுற்றுலாத்துறை சார்பில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்த இந்தத் திருவிழா வரும் ஞாயிறு வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்தோனேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தேசியக் கொடி, ஜல்லிக்கட்டு காளை, ஆக்டோபஸ், டிராகன் என விதவிதமான வடிவிலான 200-க்கும் மேற்பட்ட பட்டங்களை வானில் பறக்க விட்டனர். நுழைவுக்கட்டணம் இன்றி நடைபெறும் இந்த விழாவை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், சிறுவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
