யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற பன்முக போட்டிகளில் கலந்து கொண்ட கும்பகோணம் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அறிவியல், ஓவியம், கணிதம், யோகா என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பிரிவு போட்டிகளிலும் கலந்து கொண்ட கும்பகோணம் மாணவர்கள், மற்ற நாடுகளை விட அதிக பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு கும்பகோணத்தில் பாராட்டு விழா நடந்தது.