

ஆற்று மணலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால், மலேசியாவில் இருந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு, சுமார் 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன், மணல் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதன் தரத்தின் மீது சந்தேகம் அடைந்துள்ள பொது மக்கள், விலைக்கு வாங்க முன்வரவில்லை. கடந்த 10 நாட்களில் 4 நபர்கள் மட்டுமே, மணல் கொள்முதல் செய்ய, ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இதனால், தமிழக அரசுக்கு சுமார் 548 கோடி ரூபாய் இழப்பு என்று கூறப்படுகிறது. இந்த மணல் கட்டுமான பணிக்கு உகந்தது தானா என்று, ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.