Chennai | Egmore-ல் வரப்போகும் பல மாற்றங்கள் - ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய ரயில் முனையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம், அதன் கோதிக் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாத்தபடியே நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. காந்தி இர்வின் சாலை முனையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், வணிக வளாகங்கள், மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுடன் இரண்டு அடுக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்க முனையத்தில், மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைந்த நவீன முனையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், வாகன நிறுத்துமிடத்தில் வணிக வளாகங்கள், மற்றும் குறைந்த கட்டண உணவகம் உள்ளிட்ட வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையம் - நவீன வசதிகளுடன் விரிவாக்கம்
