144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாட படக்கூடிய தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவிற்காக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் கால்கோள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக கால்கோள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் தாமிரபரணி நதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து கஜபூஜை ,அஷ்வபூஜை கோபூஜை செய்யப்பட்டது .