

மதுரை செல்லூர் அடுத்த மீனாட்சிபுரத்தில், மதுபானக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கலைந்து செல்லுமாறு உத்தரவிட்ட காவலர்களுடன் பெண்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். கோபம் அடைந்த போலீசார், பெண்கள் மற்றும் இளைஞர்களை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று, கைது செய்தனர்.