Madurai | திருப்பரங்குன்றம் வழக்கில் வந்த தீர்ப்பு - இந்து அமைப்புகள் கொண்டாட்டம்..
திருப்பரங்குன்றம் வழக்கில் வந்த தீர்ப்பு - இந்து அமைப்புகள் கொண்டாட்டம்.. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் தர்கா, கோவில் நிர்வாகம், அரசு தரப்பு வாதங்களைக் கேட்டிருந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், அதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Next Story
