மதுரையில் வீடு புகுந்து பச்ச மண்ண கொலை செய்த குரூரன்.. தலைகாணி போல சுருட்டி கிடந்த உடல்

திருவேடகம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, தமது மனைவி தவமணி, பேரன் மிதுன் ஆகியோருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர், மதுபோதையில் முத்துசாமியின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த சிறுவன் மிதுன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com