Madurai | மதுரை அருகே தனியார் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடுரோட்டில் பயங்கர தாக்குதல்

Madurai | மதுரை அருகே தனியார் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடுரோட்டில் பயங்கர தாக்குதல்

Madurai | மதுரை அருகே தனியார் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடுரோட்டில் பயங்கர தாக்குதல் மதுரை மாவட்டம், கீழவளவு அருகே தனியார் கிரசர் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... குவாரியால் பொதுமக்களும், இயற்கை வளங்களும் பாதிக்கப்படுவதாக கூறி, குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது, குவாரியில் இருந்தவர்கள் போராட்டக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், வழக்கறிஞர் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கீழவளவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com