மதுரை மாவட்டம் புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர், ரயிலில் பயணம் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் இருந்து நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் சென்றபோது, ரயில் பெட்டியிலேயே இறந்துள்ளார். இன்று காலையில், மதுரைக்கு ரயில் வந்ததும், அவரது உடலை ரயிலில் இருந்து இறங்கிய ரயில்வே போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். ரயில் பயணத்தின்போது, பயணி ஒருவரு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.