சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் - கடும் கோபத்தில் உறவினர்கள் செய்த செயல்

x

மதுரை மத்திய சிறையில் இருந்த கைதி, உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவத்தில், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த 5ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக்கின் உடல் பிரேத பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கார்த்திக்கின் இறப்பிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், மதுரை கோரிப்பாளையத்தில், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்