Madurai International Airport|``இனி மதுரை ஏர்போர்ட் இப்படி அழைக்கப்படும்’’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Madurai International Airport|``இனி மதுரை ஏர்போர்ட் இப்படி அழைக்கப்படும்’’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பன்னாட்டு விமான நிலையமாக மதுரை விமான நிலையம் அறிவிப்பு மதுரை விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரித்து, ஏற்றுமதி-இறக்குமதி வாய்ப்புகள் உருவாகும் என விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் தெரிவித்தார். தற்போது வாரத்திற்கு 242 விமான சேவைகள் நடைபெற்று வருவதாகவும், கொழும்பு, துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படுவதாகவும் கூறினார். நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் அல்லது அண்டர்பாஸ் அமைப்பது குறித்து திட்டமிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
