இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சிவகங்கை, பாட்டம் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Published on

சிவகங்கை, பாட்டம் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் பாட்டம் கிராமத்தில் அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் விதிமீறல்கள் நடைபெற்றதாக தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு பட்டம் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்தது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com