கொம்புத்துறை "கடையக்குடி"யாக மாற்றம் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருச்செந்தூரில் உள்ள கொம்புத்துறை என்ற ஊரின் பெயரை கடையக்குடி என்று பெயர் மாற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
கொம்புத்துறை "கடையக்குடி"யாக மாற்றம் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on

திருச்செந்தூரில் உள்ள கொம்புத்துறை என்ற ஊரின் பெயரை கடையக்குடி என்று பெயர் மாற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அனைத்து தரப்பு மக்களின் ஆலோசனை பெற்று கூட்டம் நடத்தாமல் தன்னிச்சையாக கூட்டம் நடத்தி உத்தரவு பிறப்பித்த தாசில்தாரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் இந்த மனுவிற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com