ஜாமீனில் வெளியே வந்த இளைஞரை.. வன்மம் வைத்து தாக்கிய மர்ம கும்பல்..மதுரையில் பரபரப்பு

x

மதுரை, மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடு மேனாக பணிபுரிந்து வந்த இவரை, விளாங்குடி பகுதியில் வைத்து மர்மகும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு... தனது உறவினரான நவநீதன் என்பவரை, அருள்முருகன் கொன்றதும்.. இதில், சிறைக்கு சென்ற அருள் முருகன் பின்னர் பிணையில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. நவநீதன் கொலைக்கு பழிக்குப்பழியாகவே அருள் முருகன் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கும் போலீசார் தொடர்ந்து இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்