மதுரை மாட்டுத்தாவணி ஆர்ச் விபத்து.. உறவினர்கள் பரபரப்பு பேட்டி

மதுரை மாட்டுத்தாவணியில் சாலை விரிவாக்கப் பணிக்காக, நக்கீரர் தோரணவாயிலை இடித்த போது, ஜேசிபி ஓட்டுனர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், மதுரை மாவட்டம் பாரப்பட்டியை சேர்ந்த 22 வயதே ஆன, நாகலிங்கம் என தெரியவந்துள்ளது. மேலும் அப்போது, அங்கே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர், மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com