

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் பகுதியில் பொது மக்கள் மற்றும் முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு, அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், திருமங்கலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் தளர்வு செய்ய ஏற்பாடு செய்யட்டுள்ளதாக தெரிவித்தார். மக்கள் பணி செய்வதாக திமுக கூறி வருவது வேடிக்கையாக உள்ளது என்றும் அமைச்சர் உதயகுமார் விமர்சித்தார்.