அரசு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உபரி ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 444 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள், ஒரே நிர்வாகத்தில் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை நேர் செய்யப்படும் வரை புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது என்று தெரிவித்தனர்.மேலும் பயோமெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.