

சென்னை மாதவரம் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 130 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கட்டுப்படுத்தப்பட்டது. தீ அணைக்கப்பட்ட நிலையிலும், தற்போது குடோனில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது. இதையடுத்து புகைக்கு காரணமான ரசாயன மூட்டைகளை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.