ஊரடங்கு அமலில் உள்ளதால் மத்திய அரசு உத்தரவின்படி தமிழகத்திற்கு 3 மாதங்களுக்கு கூடுதலாக 1.87 லட்சம் டன் அரிசி வழங்கப்படும் என்று இந்திய உணவு கழக தென்மண்டல செயல் இயக்குனர் நசீம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் டன் அரிசி வழங்கி வருவதாக அவர் கூறினார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவளிக்க விரும்புபவர்கள் இந்திய உணவு கழகத்திடமிருந்து நேரடியாக குறைந்த விலையில் அரிசி வாங்கி கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.