காதல் திருமணம்..பெற்றோரின் ஆசை வார்த்தையில் மயங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி.. தரதரவென இழுத்து சென்ற பரபரப்பு காட்சி - தவித்த காதல் கணவன்

x

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தென்காசி, குருத்திகா சம்பவத்தை போல, காதல் கணவரிடம் இருந்து இளம் பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் பிரித்து காரில் இழுத்து சென்ற சம்பவம் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

கன்னியாகுமரி மாவட்டம் தேரூரை பூர்விகமாக கொண்டவர் இளம் பெண் தர்ஷினி பிரியா. நெல்லையில் வசித்து வந்த இவரும் நெல்லை, காவல் கிணறு பகுதியை சேர்ந்த மரிய ஜெபஸ்டின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்...

கடந்த 10 ஆம் தேதி சென்னை, தாம்பரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தங்களது பெற்றோரால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கையாக சென்னை, சேலையூர் போலீசில் புகாரளித்துள்ளனர்....

இது குறித்து இரு தரப்பையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அப்போது தர்ஷினி பிரியாவை அவரது குடும்பத்தினர் சமாதானம் பேசுவது போல் பேசியும், பெரும் விமர்சையாக இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதாகவு கூறி வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றனர்...

இதன்பின்பு திடீரென தனது குடும்பத்தாரின் நடத்தையிலும், செயல்பாடுகளிலும் மாறுதல்கள் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளான தர்ஷினி பிரியா, தான் காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு துரோக செய்ததாக நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது...

இந்நிலையில், தனது வீட்டில் தர்ஷினி பிரியா திடிரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது... உடனே, தர்ஷினியை மீட்ட அவரது குடும்பத்தினர் பெண்ணை ஆரல்வாய்மொழியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்...

அப்போது அங்கு சிகிச்சையில் இருந்தபோதே இளைஞர் மரிய ஜெபஸ்டினுக்கு, ரகசியமாக தகவல் தெரிவித்த தர்ஷினி பிரியா, தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லுமாறு கூறி அழைத்திருக்கிறார்...

இந்நிலையில், மருத்துவமனை முன்பு மரிய ஜெபஸ்டியன் தனது நண்பர்களுடன் வந்து குவிந்திருக்கிறார்....

இதையறிந்த பெண் குடும்பத்தினருக்கும், இளைஞர் தரப்பினருக்கும் இடையே மருத்துவமனை முன்பு தகராறு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த காவல்நிலைய போலீசார் விரைந்தனர்...

அப்போது, கண்ணீர் வடிந்த முகத்துடன் சோகத்தில் இருந்த, தர்ஷினி பிரியாவை அவரது குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக காரில் இழுத்து செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கிட்டதட்ட இதே பாணியில், தென்காசியில் குருத்திகா என்ற இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் களேபரத்தை ஏற்படுத்திய நிலையில், கன்னியாகுமாரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அரங்கேறிய இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...




Next Story

மேலும் செய்திகள்