நேருக்கு நேர் மோதிய லாரிகள் | உடல்நசுங்கி பலியான 3 ஓட்டுநர்கள்

x

கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும், ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாளையம்பட்டி பகுதியில் தூத்துக்குடியில் இருந்து பழனி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியும், மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், இரண்டு வாகனங்களில் இருந்த 3 ஓட்டுநர்களும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஈச்சர் வேன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில்இருந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்