சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர்.. வாகனத்தில் சிக்கிய மர்ம மூட்டைகள்

x

சேலம் மாவட்டம் ஓமலூரில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட உணவுப்பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல் பாக்கி கிராமத்தில் ஆம்னி வேனை சோதனை செய்த போது, பெட்டி பெட்டியாக உணவு பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பல் பாக்கி கிராமத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து உணவுப் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்