Accident |அரசு பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவர் பலி - அதிர்ச்சி காட்சி
அரசு பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவர் பலி - அதிர்ச்சி காட்சி
வேப்பூர் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் அரசு பேருந்து மோதி பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி (65) சொந்த வேலை காரணமாக வேப்பூர் செல்லும் போது காட்டுமைலூர் சாலையில் இருந்து சேலம் வேப்பூர் மாநில நெடுஞ்சாலையை கடக்கும் போது சேலத்தில் இருந்து மைலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உடலை மீட்ட வேப்பூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்"
