Tenkasi Falls | குற்றால அருவியில் தவறி விழுந்த சிறுமி | தூக்கிக்கொண்டு ஓடிய தீயணைப்புத்துறை வீரர்
Tenkasi Falls | குற்றால அருவியில் தவறி விழுந்த சிறுமி | தூக்கிக்கொண்டு ஓடிய தீயணைப்புத்துறை வீரர்
குற்றால அருவியில் சிறுமி காயம் - ஆம்புலன்ஸ் இல்லாததால் அதிருப்தி தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுமி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊத்துமலை கடங்கநேரியை சேர்ந்த சிறுமி சுபாரெஷி அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உதவிக்காக கூச்சலிட்ட நிலையில், அப்போது 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால், அங்கு பணியில் இருந்த தீயணைப்புத்துறை வீரர் குட்டித்துரை சிறுமியை தனது முதுகில் சுமந்து ஓடி சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குற்றாலம் போன்ற முக்கிய சுற்றுலா தலத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
