ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் பலத்த மழை காரணத்தால் பனை மரத்தின் மீது இடி விழுந்தது. இதனால் பனைமரம் பற்றி எரிய தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். தொடர் மழை காரணமாக, பனை மரத்தில் பற்றி எரிந்த தீ தானாகவே அணைந்தது.