தங்கையை காதலித்த நண்பர்... நீரில் மூழ்கடித்து கொன்ற சட்டக் கல்லூரி மாணவர்
உளுந்தூர்பேட்டை அருகே தங்கையை காதலித்த நண்பனை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சட்டக் கல்லூரி மாணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், பிரகாஷ், அய்யனார் ஆகிய மூவரும் நண்பர்கள். மூவரும் கிளியூர் கிராமத்திற்கு மது அருந்து சென்ற போது ஏற்கனவே பிரகாஷின் தங்கையை சுபாஷ் காதலித்து வந்தது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரகாஷ் மற்றும் அய்யனார் சேர்ந்து சுபாஷை தாக்கி குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் சுபாஷின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரகாஷ் மற்றும் சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
