நிலத் தகராறு - 2 முதியவர்கள் உட்பட மூவர் தீக்குளிக்க முயற்சி

x

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மூவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் மலையப்பன் மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகாத மகன் குமாரசாமி உள்ளார். இவர்கள் மூவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். விசாரணையில், இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் பக்கத்து நில உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகக் கூறினர். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்த போலீசார், மூவரையும் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்