தமிழ்நாடு
அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த கூலித் தொழிலாளி பலி
மதுரை சோழவந்தான் அருகே அறுந்து விழுந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலியானார். மேலக்கால் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவருக்கு 2 மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். லி வேலை செய்து வந்த பிச்சை அதிகாலை வீட்டின் அருகே உள்ள வாழை தோட்டதற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். எனவே உயிரிழந்த கூலித்தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
