சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீர் - நடவடிக்கை எடுக்காததால் வீடுகளை காலி செய்ய மக்கள் முடிவு

கும்பகோணம் நகராட்சி துக்காம்பாளையம் பகுதியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சாலைகளில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீர் - நடவடிக்கை எடுக்காததால் வீடுகளை காலி செய்ய மக்கள் முடிவு
Published on
கும்பகோணம் நகராட்சி துக்காம்பாளையம் பகுதியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சாலைகளில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.தற்போது அந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டனர். கழிவுநீரை சீர் செய்யும் வரை தாங்கள் தங்கியிருக்க மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com