

நவகிரக தலங்களில் குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது, சிவ லிங்க வடிவில் 1008 சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.