குலசேகரபட்டினம் தசரா விழா களை கட்டியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சிம்ம வாகனத்தில் மகிஷா சூரமர்த்தினி கோலத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.