Krishnagiri | நீதிமன்றத்திற்கு சென்று வருவதாக கூறி சென்ற நபர்.. சடலமாக கிடந்ததால் அதிர்ச்சி

நீதிமன்றத்திற்கு சென்று வருவதாக கூறி சென்ற நபர்.. சடலமாக கிடந்ததால் அதிர்ச்சி

#krishnagiri #thanthitv கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற நபர், 4 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்கப்பட்டார். மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த 43 வயது நபர் சரவணன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சரவணன் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக கடந்த திங்கள் கிழமை நீதிமன்றத்திற்கு சென்று வருவதாக கூறி சென்ற சரவணன், திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி அடுத்த மாதம்பதி சிலம்பம் காட்டில் தூக்கிட்ட நிலையில் சரவணன் சடலமாக மீட்கப்பட்டார். சரவணனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கவே, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com