Krishnagiri | உடனடியாக 9 குடோன்களுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
Krishnagiri | உடனடியாக 9 குடோன்களுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
Krishnagiri | உடனடியாக 9 குடோன்களுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஓசூர் ராம்நகர் பகுதியில் பழைய பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நகர் நல அலுவலர் அஜிதா தலைமையிலான அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அப்பகுதியில் உள்ள பல குடோன்கள் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று மற்றும் மாநகராட்சி அனுமதி இன்றி இயங்குவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த 9 பழைய பொருட்கள் சேமிப்பு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டும் உரிமம் பெறாத குடோன்கள் மீது இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
