சர்வதேச சுற்றுச்சூழல் தினம் : கோவளம் கடற்பகுதியில் தூய்மை பணி

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுச்சூழல் தினம் : கோவளம் கடற்பகுதியில் தூய்மை பணி
Published on

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கடலோர காவல்படையினர் கடல் தூய்மை குறித்து பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலோர காவல்படையினர் சென்னை கோவளம் கடற்கரையில் தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது கடலுக்குள்ளும் இறங்கி தூய்மைப்படுத்தினர்... 2 மணி நேரம் நடைபெற்ற தூய்மை பணியில் கடலில் இருந்து 500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com