Kovai Police Issue| பாய்பிரெண்டுடன் பேசிய இளம்பெண்.. தனியே அழைத்து சென்று காவலர் செய்த செயல்

Kovai Police Issue| பாய்பிரெண்டுடன் பேசிய இளம்பெண்.. தனியே அழைத்து சென்று காவலர் செய்த செயல்

பாய்பிரெண்டுடன் பேசி கொண்டிருந்த இளம்பெண்.. தனியே அழைத்து சென்ற காவலர்.. கேட்ட அலறல்.. கோவையில் ஷாக்

கோவையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது கோவையில் ரோந்துப் பணியின் போது, இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் போலீஸ் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை துடியலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட இரண்டாம் நிலைக் காவலரான வினோத்குமார், வெள்ளக்கிணறு ஹவுசிங் போர்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணைத் தனியே அழைத்துச் சென்று, விசாரிப்பது போல் பாசாங்கு செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டதை அடுத்துக் காவலர் அங்கிருதுந்து தப்பியோடியுள்ளார்.. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், காவலர் வினோத்குமாரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவருடன் ரோந்து சென்ற மற்றொரு காவலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com